தொடர் மழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு

கனமழை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி அடுத்துள்ள குற்றாலம், மேலகரம்,செங்கோட்டை, குண்டாறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Exit mobile version