பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால் கரையோர கிராம மக்களுக்கு வருவாய்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பவானிசாகர் அணை ஏற்கனவே முழுகொள்ளவை எட்டியுள்ள நிலையில், தற்போது அணைக்கு வினாடிக்கு 10ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக நீர் வரத்து உள்ளதால் பவானிசாகர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்து, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களான கொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசப்பாளையம், மேவாணி, உள்ளிட்ட பகுதிகளுக்கு வருவாய்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version