கனமழையால் உத்திரப்பிரதேசத்தின் சித்திரகூட் நகரைச் சூழ்ந்த வெள்ளம்

உத்திரப்பிரதேசத்தில் கனமழை பெய்ததால் சித்திரகூட் நகரில் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.

உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிடையே உள்ள விந்திய மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மந்தாகினி ஆற்றில் கரைமீறிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள சித்திரகூட் நகரில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பான வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version