கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாகவும், பலத்த காற்று வீசுவதாலும், மரங்கள் சாய்ந்து விழக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version