மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பால் வெள்ள எச்சரிக்கை

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு அதிகப்படியான தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உள்ளார்.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பூலாம்பட்டி பேருந்து நிலையம் , படகுதுறை, படித்துறை ஆகிய இடங்களில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Exit mobile version