வெள்ளப் பாதிப்பு: தயார் நிலையில் உள்ள மீட்பு பணிக்குத் தேவையான கருவிகள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ள மீட்பு பணி குறித்து மக்கள் தொலைபேசியில் தங்களை அணுகலாம் என்று தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது எனப் பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாகத் தீயணைப்புத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 வீரர்கள் கொண்ட கமாண்டோ குழு தயார் நிலையில் உள்ளதாகவும், 24 மணிநேரமும் தீயணைப்புத் துறையினரின் சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 101 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளிக்கலாம் என்றும், சென்னை மாநகரத்திற்கு கூடுதலாக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version