அரபிக்கடலில் நிலவிய புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவாலாக மழை பெய்தது. மலையை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் பெய்த மழை காரணமாக தேங்காய்பட்டிணம் பகுதியில் 70 ஆண்டு பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதில், வீட்டினுள் நிறுத்தப்பட்ட காரின் பக்கவாட்டு கதவு கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
Discussion about this post