தொழிற்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம்

136 பயணிகளுடன் சென்ற விமானம் அமெரிக்காவின் புளோரிடா மாகாண விமானநிலையம் அருகே உள்ள ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

போயிங் 737 ரக விமானம் குவாண்டநாமோ வளைகுடா கடற்படை நிலையத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் சென்றுள்ளது. ஜாக்சன் வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, தொழிற்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகே உள்ள ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

Exit mobile version