திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதே போல் ரயில் நிலையங்களிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version