முல்லைப் பெரியாறு அணையில் ஐவர் குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழுவின் ஐவர் குழு இன்று ஆய்வு நடத்துகிறது….

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்கவும், பராமரிக்கவும் மூவர் குழுவையும், அவர்களுக்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட ஐவர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில் பெரியாறு அணையின் பேபி அணை, கேலரி, 13 மதகுகள், அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் குறித்து ஐவர் குழுவினர் ஆய்வுகளை நடத்துகின்றனர். மேலும் மாலையில், குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

Exit mobile version