நாங்குநேரி தொகுதியில் பணம் கொடுக்க முயன்ற திமுக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கல்லத்தி கிராமத்தில், பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவண குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், பட்டுவாடா செய்வதற்காக திமுகவினர் வைத்திருந்த பணத்தை பிடுங்கி வீசினர். சம்பவம் குறித்து தகவலறிந்த வருமான வரித்துறையினர், விரைந்து வந்து அப்பகுதியில் சிதறிக் கிடந்த சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவண குமார் மற்றும் திமுகவினர் 5 பேர் மீது, மூலக்கரைப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version