கோவை உட்பட 7 இடங்களில் கொள்ளையடித்த 5 பேர் கைது

கோவை உட்பட 7 இடங்களில் கொள்ளையடித்த 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து  237 சவரன் நகைகளை மீட்டனர்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவர் வீட்டில், 137 சவரன் தங்க நகைகள், மற்றும் வெள்ளி பொருட்களுடன் 15 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜசேகர், மாரியப்பன், பாண்டித்துரை, சுரேஷ், மற்றும் சுள்ளான் சுரேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். 5 பேரும் சேர்ந்து கோவை, ஈரோடு, ஓசூர் மற்றும் கேரளா உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 237 சவரன் தங்கநகைகள், 3 கார்கள், மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version