டோரியன் புயல் காரணமாக அபேகோ தீவு பகுதியில் 5 பேர் பலி

சக்தி வாய்ந்த டோரியன் புயல் காரணமாக பஹாமஸின் அபேகோ தீவு பகுதியில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. நேற்று காலை 12.40 மணிக்கு கரையை கடந்த புயல் காரணமாக அங்கு மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் பஹாமஸின் அபேகோ தீவு பகுதி பலத்த சேதம் அடைந்துள்ள நிலையில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் ஹுபேர்ட் மின்னிஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புயல் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையும் தாக்கும் வாய்ப்பு இருப்பதால், ஃபுளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா ஆகிய பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version