மகாராஷ்டிராவில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது 5 பேர் பலி

மகாராஷ்டிராவில் கனமழையால் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிட்ரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை மாவட்டம் பிம்ப்ரிப்பாடா பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதேபோல், புனே மாவட்டம் அம்பேகான் நகரிலுள்ள சிங்காத் கல்லூரியின் சுற்றுச்சுவர் கனமழையால் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புக்குழு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, புனே மாவட்டம் கோண்டுவா பகுதியில் உள்ள சுவர் மழையால் இடிந்த விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் வெகுவாக அச்சமடைந்துள்ளனர்..

Exit mobile version