தமிழகத்தின் 5 புதிய மாவட்டங்களை நேரில் சென்று தொடக்கி வைக்கவுள்ளார் முதலமைச்சர்

தமிழகத்தின் 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடக்கி வைக்கவுள்ளார்.

அதன்படி, தென்காசி மாவட்டத்தை வரும் 22-ம் தேதி காலை 9.30 மணிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வரும் 27-ம் தேதி காலை 10.45 மணிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார்.

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை வரும் 28-ம் தேதி காலையிலும், 29-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார்.

புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர் அலுவலகங்கள் அமைய உள்ள இடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

Exit mobile version