தமிழகத்தின் 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடக்கி வைக்கவுள்ளார்.
அதன்படி, தென்காசி மாவட்டத்தை வரும் 22-ம் தேதி காலை 9.30 மணிக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வரும் 27-ம் தேதி காலை 10.45 மணிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார்.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை வரும் 28-ம் தேதி காலையிலும், 29-ம் தேதி நண்பகல் 12.15 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார்.
புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர் அலுவலகங்கள் அமைய உள்ள இடங்களை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
Discussion about this post