நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இந்திய விமானப் படைக்கான உடற்தகுதி தேர்வு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இந்திய விமானப் படைக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இந்திய விமான படைக்கான தகுதித் தேர்வுகள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

இதில், கோயம்புத்தூர் திண்டுக்கல் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதிகாலை முதலே டோக்கன் வழங்கப்பட்டு வரிசையின் அடிப்படையில், தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்ததாக எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வை முன்னிட்டு பாளையங்கோட்டை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version