எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் 6 பேர் நாட்டுப்படகில் வழக்கம் போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கையின் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 6 மீனவர்களும் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version