மியான்மர் மீனவர்கள் நாளை மறுநாள் தாயகம் திரும்புவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஜூலை மாதம் 23-ம் தேதி 9 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றதாகவும், அவர்கள் காணாமல் போன நிலையில், மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் மற்ற வசதிகள் மியான்மரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இந்திய தூதரகம் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கையால், 8 மீனவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் அனைவரையும் நாளை மறுநாள் தமிழகம் அழைத்துவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தனிப்பட்ட நிகழ்வில் காணாமல்போன மீனவர் பாபுவை தேடும் பணி மியான்மர் நாட்டு கடற்படையினரால் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version