இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் மீனவர்கள் தத்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால், மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், சிறைப்பிடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து 541 விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றனர். பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version