மீனவர்கள் வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் -இந்திய வானிலை மையம்

வங்க கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று, மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் கடுமையாக இருக்கும் என்றும், மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Exit mobile version