நடுக்கடலில் மீனவர் பரிதாப உயிரிழப்பு

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நாகையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகை மாவட்டம், கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த ராமசந்திரன் என்பவர், 4 மீனவர்களுடன் ஃபைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். வேளாங்கண்ணியில் இருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சஷ அலையில், மீனவர் ராமசந்திரன் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்தார். ராமசந்திரனைக் காப்பாற்ற படகில் இருந்த மீனவர்கள் முயற்சித்தபோதும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மீனவர் ராமசந்திரன் உயிரிழந்தது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version