கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை விரட்டியடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த, இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும், பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, நேற்று ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version