மீன்பிடி அமலாக்கப்பிரிவிற்கு புதிய வாகனங்கள் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடல் மீன்பிடி அமலாக்கப்பிரிவிற்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள வாகனத்தினை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடல் மீன்பிடி அமலாக்கப் பிரிவிற்கு 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 19 வாகனத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடல் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் ஆபத்து காலத்தில் மீனவர்களுக்கு உதவும் வகையில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Exit mobile version