ஆன்லைனில் இன்று முதல் டிக்கெட் விற்பனை!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று முதல் தொடங்குகிறது. தற்போது நடைபெற்று வரும் முதல் போட்டியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், 50 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது, அதன்படி. வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 10 மணி முதல், ஆன்லைனில் தொடங்குகிறது. இதில், 100, 150, 200 ரூபாய் விலைகளில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version