தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : மயங்க் அகர்வால் அபாரா சதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இளம் வீரர் மயங்க் அகர்வால் அபாரமாக விளையாடி முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் பொறுப்பாக விளையாடினர். இந்த ஜோடி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. தொடக்க வீரராக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா, அதிரடியில் மிரட்டி சதத்தை பூர்த்தி செய்தார்.

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் மயங்க் அகர்வால், சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

Exit mobile version