முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 395 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடர்ந்தது. புஜாரா 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார்.

Exit mobile version