முதல் ஒருநாள் போட்டி : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று சிட்னியில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகிறது. அதன்படி முதல் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணி சிட்னி போட்டியில் ஆடவுள்ள 11 வீரர்கள் அடங்கிய பட்டியலை அறிவித்துவிட்டது. இதனிடையே தனியார் தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்ததாக ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் இருவரும் இந்திய அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரில் அவர்கள் ஆடுவதற்கு வாய்ப்பில்லை.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலியா வரிந்துகட்டும் என்பதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.50க்கு தொடங்குகிறது.

Exit mobile version