இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறப்பு!

தமிழகத்தில், இன்று முதல் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் குறையாததால் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கைக்கு இணங்க கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட்டது. மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியை கருத்தில் கொண்டு ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்காக கடந்த 2ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், இளநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version