அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரும் 31ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என, கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதுமுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், 31ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கல்லூரியில் சேரும் மாணவர்களின் விவரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்த, கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, இது தொடர்பாக உத்தரவு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டு கல்விக் கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.