காஷ்மீரில் ராணுவ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு

காஷ்மீரில் ராணுவ படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று காலை முதல் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இன்று காலை அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் தீடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு ராணுவத்தினரும் பதில் தாக்குதல் கொடுத்தனர். இந்தநிலையில் காலை முதல் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. செல்போன் மற்றும் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

Exit mobile version