சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலில் தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயில் விழா கடந்த 11ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. செவ்வாய்க்கிழமை இரவு அம்மன் அழைத்து வருதல், மற்றும் குதிரை வாகனத்தில் அம்மன் உலா நடைபெற்றது. இதையடுத்து இன்று பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெற்றது. முன்னதாக பவானிஆற்றில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டது. தீமிதி நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள், என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version