டெல்லியில் முண்ட்கா பகுதியை சூழ்ந்துள்ள புகையை அகற்ற தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

தலைநகர் டெல்லியில் மரக் குடோனில் பற்றிய தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

முண்ட்கா பகுதியில் அதிகாலை மரக் குடோனில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியின் அனாஜ் மண்டியில் இயங்கி வந்த சட்டவிரோதமான தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் பலியாகினர். மேலும் 63 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், முண்ட்கா பகுதியில் மரக் குடோனில் திடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version