தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் நாளை முதல் பட்டாசுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் நாளை திறக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு ஒருவாரமே உள்ள நிலையில், புத்தாடை, பட்டாசுகள், இனிப்புகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பெருநகர பட்டாசு வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் 70 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிவகாசி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 முதல் 7 சதவிகிதம் வரை பட்டாசுகள் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே இடத்தில் 70-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்பட இருப்பதால் தீயணைப்பு துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version