பட்டாசு தயாரிப்பாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்

பட்டாசு தயாரிப்பாளர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்கக் கோரி மனுத்தாக்கல் செய்ததற்கு நேரில் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Exit mobile version