பாலிடெக்னிக் மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: சரண் அடைந்த இளைஞர் விஜய் சிறையில் அடைப்பு.

வண்டலூர் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் அவரது நண்பர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் நேற்று பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவர் அவரது நண்பர் விஜயகுமார் என்ற இளைஞரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விஜயகுமார் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதி காயத்திரிதேவி முன்னிலையில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தானும் முகேஷூம் துப்பாக்கியை ஒருவர் நெற்றியில் ஒருவர் வைத்து மாறி மாறி விளையாடியதாகவும், எதிர்பாராத விதமாக முகேஷ்-ன் நெற்றியில் துப்பாக்கி வெடித்துவிட்டதாகவும் விஜயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகுமார் கைக்கு துப்பாக்கு வந்தது எப்படி, அது யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version