கடும் வெயில் காரணமாக பனை மரங்களில் பற்றிய தீ

திருவாரூரில் கடும் வெயில் காரணமாக பனை மரங்களில் பற்றிய நெருப்பை, தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர்.

திருவாரூர் விளமல் பகுதியில் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பனை மரங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் கடுமையான வெயில் காரணமாக பனை மரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. மேலும் காற்றின் வேகம் காரணமாக அருகிலுள்ள மரங்களுக்கும் தீ பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version