சூடானில் தீ விபத்தில் சிக்கிய 5 தமிழர்கள் தாயகம் திரும்பினர்

சூடான் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 5 பேர் தாயகம் திரும்பினர்.

கடந்த 3-ம் தேதி சூடான் நாட்டின் சி லாசரஸில் இயங்கி வரும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரில், 3 பேர், காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்றதுடன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கடலூரை சேர்ந்த முகமது சலீம், தங்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அந்த தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னதாக, நேற்று சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 பேரை, அதிகாரிகள் அவர்களது சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Exit mobile version