ரஷ்யாவின் விமானம் தாங்கி போர் கப்பலில் தீ விபத்து

ரஷ்யாவின் விமானம் தாங்கி கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அட்மிரல் குஸ்னெட்சோவ் என்ற விமானம் தாங்கி கப்பலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பழுது பார்க்கப்பட்டு வரும் இந்த கப்பலில், ஏற்கனவே 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரேன் ஒன்று மேல்தளத்தில் விழுந்ததால் பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது கப்பலின் முதல் தளத்தில் தீப்பற்றியால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

இந்த தீ விபத்தின்போது கப்பலில் 400 பேர் பணியில் இருந்துள்ளனர். வெல்டிங் பணிகளில்போது தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் 3 பேரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version