டெல்லியின் சிஜிஓ காம்ப்ளெக்சில் தீ விபத்து

டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் 24 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.

டெல்லியின் சிஜிஓ காம்ப்ளெக்சில் அமைந்துள்ள பண்டிட் தீனதயாள் அந்தியோத்தியா பவனின் 5வது மாடியில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. இந்தக் கட்டிடத்தில் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் சூழல் மாற்றம் உள்ளிட்ட அமைச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன.5வது மாடியின் ஒரு இடத்தில் பற்றிய தீ, மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 24 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. அலுவலக பணிகள் துவங்கும் முன்பு காலை வேளையில் தீப்பற்றியதால், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version