டெல்லி: குடிசை பகுதியில் பயங்கர தீ விபத்து – சுமார் 250 வீடுகள் எரிந்து சாம்பல்

டெல்லியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

டெல்லி பாஸ்சிம்புரியில் உள்ள குடிசைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரிந்த தீ மளமளவென அருகருகே இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகியிருப்பதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நேற்றைய தினம் டெல்லியில் உள்ள ஹோட்டல் அர்பில் பேலஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version