குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

ஜெயங்கொண்டம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் குடிசை வீட்டில் திடீரென்று தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக மரங்கள் மற்றும் மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

மளமளவென எரிந்த தீயானது மேலும் பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுபற்றி ஜெயங்கொண்டம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

Exit mobile version