மின்னல் தாக்கியதில் புகையிலை பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கில் தீ விபத்து

திருவள்ளூர் அருகே மின்னல் தாக்கியதால், புகையிலை பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

பொன்னேரியை அடுத்த பண்டிகாவனூர் பகுதியில் புகையிலை பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்த நிலையில், கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் மேற்கூரை இடிந்து விழுந்து, புகையிலை பெட்டிகளில் தீ பரவியது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் பலமணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் எரிந்து நாசமாகின.

Exit mobile version