ஸ்பெயினில் நடைபெற்ற காளைகளின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் விளையாட்டு

ஸ்பெயின் நாட்டில் காளைகளின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் விளையாட்டு நடைபெற்றது

ஸ்பெயின் நாட்டில் மெடினாசெல்லி என்ற இடத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் காளைகளின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் விளையாட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டில் காளையின் கொம்புகளில் துணிகளை கட்டி அதில் நெருப்பு மூட்டுகின்றனர், இதனால் மிரண்டுபோகும் காளை பயத்திலும், பிதீயிலும் அங்குமிங்கும் ஓடுகிறது, அவ்வப்போது மைதானத்தின் நடுவே மூட்டப்பட்டிருந்த தீப்பிளம்புகளையும் காளைகள் முட்டி தூக்கி ஏறிந்தன. காளைகள் முட்டியதில், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபரீத விளையாட்டுக்கு ஸ்பெயின் நாட்டின் தன்னார்வ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Exit mobile version