பூந்தமல்லி அருகே திருமண நிகழ்வின் போது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து

சென்னை பூந்தமல்லி அருகே திருமண விழாவில் பட்டாசு வெடித்ததால் நியாய விலை கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சென்னை பூந்தமல்லி அருகே லட்சுமிபுரம், ருக்குமணி நகர் பகுதியில் கூட்டுறவு நியாய விலை கடை அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடைப்பெற்று வந்தது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் பட்டாசு வெடித்ததில், பட்டாசு சிதறி அருகில் உள்ள நியாய விலை கடை மீது விழுந்ததில் கடை தீ பிடித்து எரிந்தது.

இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கபட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமலும், நியாய விலை கடையில் உள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடையாமலும், விரைந்து தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Exit mobile version