ஊத்துக்குளி அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து

 

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே, பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் செந்தில் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோனில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருப்பதாக குடோன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தீ விபத்து குறித்து ஊத்துக்குளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version