கொடுங்கையூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் குடோனில் தீ விபத்து

சென்னை கொடுங்கையூரில் உள்ள சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட தீ ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது…

சென்னை கொடுங்கையூரில் உள்ள சோப்பு மற்றும் பவுடர் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் வைத்திருந்த குடோனில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், 5 மணி நேர போரட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்கள் என்பதால் தீயை அணைக்க, அதிக நேரம் ஆனதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காணப்பட்டது. மேலும் விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Exit mobile version