ஆலப்பாக்கத்தில் தெர்மாகோல் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான தெர்மாகோல் பேக்கிங் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மூலப்பொருள் குரூட் ஆயில் பார்லர்களில் ஏராளமானவை தொழிற்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சுமார் ஒன்பது வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கினர்.

4 மணி முயற்சிக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குரூடு ஆயில் ஆகியவை இருந்ததன் காரணமாகவே தீயை அணைக்க முடியாமல் போராடியதாக தெரிகிறது. தீ விபத்து காரணமாக தொழிற்சாலை அருகே இருந்த தனியார் பள்ளிக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version