மும்பையில் நள்ளிரவில் மர அறுவை ஆலையில் தீவிபத்து

மும்பை பைக்குல்லாவில் மர அறுவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள், பலகைகள் எரிந்து சாம்பலாயின.

மும்பை பைக்குல்லாவில் மசாகான் துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் மர அறுவை ஆலைகள் அமைந்துள்ளன. இங்குள்ள மர அறுவை ஆலையில் நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் இந்தத் தீவிபத்தில் ஆலையின் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டைகள், பலகைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. 

Exit mobile version