கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் 2 பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு

சென்னை கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் இரண்டு பேருந்துகளில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால், அச்சமடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். கொளுந்து விட்டு எரிந்த தீயால் பேருந்து முற்றிலும் எரிந்தது சேதமடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து செயல்பட்டு, மேலும் தீ பரவாமல் தடுத்து, தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Exit mobile version